வங்கதேசத்தில் ஒரு நபர் துப்பாக்கி ஏந்தியிருக்கும் பழைய காணொளி, இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையைக் காட்டுகிறது என்ற தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் காணொளி வங்காளதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து வந்ததாகவும், காணொளியில் உள்ள நபர் குற்றப் பின்னணி கொண்டவர் என்றும், அங்குள்ள அரசியல் கட்சியான அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் உறுப்பினர் எனவும் பூம் கண்டறிந்துள்ளது. இந்த காணொளி கடந்த 2024ஆம் அண்டு ஜூலை மாதம், அந்நாட்டில் இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தங்களைக் கோரி மாணவர்கள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியபோது எடுக்கப்பட்டதாக எங்கள் உண்மை சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத்திற்கு எதிரான பல வன்முறை போராட்டங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், அம்மாநிலத்தின் முக்கிய பகுதியான முர்ஷிதாபாத் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு உச்சக்கட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த நிலைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாஜகவும் மத்திய அரசும் மக்களின் கோபத்தைத் தூண்டுவதற்காக தவறான தகவல்களைப் பரப்புவதாக பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.37 வினாடிகள் கொண்ட இந்த காணொளியில், தலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் சாலையில் துப்பாக்கியை ஏந்தி நடப்பதையும், பின்னர் அதில் வெடிமருந்துகளை ஏற்றுவதைக் காட்டுகிறது. "இந்த காணொளி மேற்கு வங்கத்தின் நிலையை உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் சாகரிகா கோஷுக்கு, இது பாஜகவின் பிரச்சாரம். வாவ் டிஎம்சி வாவ் !!" என்ற காப்ஷனுடன் இது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.
பதிவைப் பார்க்க இங்கே மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட பதிவைப் பார்க்க கிளிக் செய்யவும். இங்கே
இந்த காணொளியில் சில ஃபிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங்கில் மாணவர் போராட்டக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடந்த வன்முறை மோதல்கள் குறித்த வங்களா செய்தி அறிக்கைகளிலும் அதே காட்சிகளைக் கண்டறிந்தது.
இந்த காணொளியை சிட்டகாங் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் என்று நியூஸ்24 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காணொளியில் உள்ள நபர் முகமது ஃபிரோஸ் என்றும், அவர் ஜூபோ லீக் தலைவரும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் அடையாளம் கண்டுள்ளது.
இந்த காணொளியில் சில ஃபிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்ததில், 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங்கில் மாணவர் போராட்டக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடந்த வன்முறை மோதல்கள் குறித்த வங்களா செய்தி அறிக்கைகளிலும் அதே காட்சிகளைக் கண்டறிந்தது.
இந்த காணொளியை சிட்டகாங் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் என்று நியூஸ்24 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காணொளியில் உள்ள நபர் முகமது ஃபிரோஸ் என்றும், அவர் ஜூபோ லீக் தலைவரும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் அடையாளம் கண்டுள்ளது.
பங்களா ட்ரிப்யூன் பத்திரிகையும் இந்த காணொளியின் நீண்ட பதிப்பைப் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று பதிவேற்றியுள்ளது. அதில் அந்த இடம் வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement