பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் பதிலடி என வைரலாகும் பழைய காணொளி
வைரலான காணொளி இணையத்தில் இருப்பதையும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த காணொளி குறித்த செய்தி அறிவிக்கப்பட்டதையும் பூம் கண்டறிந்துள்ளது.



ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக, இந்திய பாதுகாப்புப் படையினரின் கடுமையான பீரங்கித் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் ஒரு பழைய காணொளியை தவறாக வைரலாகி வருகிறது. பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் 12 பாகிஸ்தான் வீரர்கள் தாக்குவதைக் காட்டுவதாக தவறான கூற்றுடன் இந்த காணொளி பகிரப்படுகிறது.
இந்த காணொளி கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இணையத்தில் இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையுடன் தொடர்புடையது அல்ல என்றும் பூம் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக எந்த நம்பகமான செய்தி அறிக்கையையும் நாங்கள் கண்டறியவில்லை.
இந்த ஆண்டு(2025) ஏப்ரல் 22 தேதியன்று, காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி) உடன் தொடர்புடைய நிழல் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பொதுமக்கள் மீதான மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து, அவர்களைக் கொல்வதற்கு முன்பு அவர்களது அடையாளங்களையும் பெயர்களையும் கேட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
தமிழில், எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், “LOC பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது ராணுவ வீரர்கள் தாக்குதலை தொடுத்து இருக்கிறார்கள். இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம். POK காஸ்மீரை மீட்க வேண்டிய நேரம் இது. அடிக்கிற அடியில இந்தியாவிற்குள் தீவிரவாதம் பேச்சே இருக்க கூடாது.” என்ற காப்ஷனுடன் இந்த காணொளி பகிரப்பட்டது.
இதுவே, ஆங்கிலத்தில் மிகக்குறிப்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற கூற்றுடன் இந்த காணொளி வைரலானது. @Realbababanaras என்ற எக்ஸ் கணக்கில், “முக்கிய செய்தி: டாட்டா பானி பகுதியில் நடந்த போர் நிறுத்த மீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் குறைந்தது 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 நிலைகள் மற்றும் 2 பீரங்கி நிலைகள் அழிக்கப்பட்டன. கனரக பீரங்கி மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. (ஆதாரங்கள்). மேலும் விவரங்கள் விரைவில்," என்ற வாசகத்துடன் காணொளி பகிரப்பட்டுள்ளது.
காப்பகப்படுத்தப்பட்ட பதிவு
உண்மைச் சரிபார்ப்பு
வைரலான இந்த காணொளி பழைய காணொளி என்றும், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இணையத்தில் உள்ளது என்றும் பூம் கண்டறிந்துள்ளது. முதலில், இந்த காணொளியில் உள்ள காட்சிகளை கீஃப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அப்போது, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 15 தேதியன்று, IAF Garud என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அதே காணொளியைக் கண்டறிந்தோம்.
ரிபப்ளிக் பாரத்தின் செய்தி அறிக்கையின்படி, இந்த காணொளி பூஞ்சிலிருந்து எடுக்கப்பட்டது. மேலும் போர் நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தான் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகிறது.
மேலும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் எந்தவொரு பதிலடி நடவடிக்கையிலும் 12 பாகிஸ்தான் வீரர்கள் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட செய்தி அறிக்கைகள் எதுவும் இல்லை.